வாரச்சந்தை அருகில் சமுதாய கூடம்ரூ. 35 லட்சத்தில் கட்ட நகராட்சி முடிவு

Thursday, 30 August 2012 09:49 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமலர்            30.08.2012

வாரச்சந்தை அருகில் சமுதாய கூடம்ரூ. 35 லட்சத்தில் கட்ட நகராட்சி முடிவு

கம்பம்:கம்பம் வாரச்சந்தை அருகில்,35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்ட, நகராட்சி முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில், 2008-09ல் கம்பம் நகராட்சி பகுதியில் 325 வீடுகள் கட்டவும், அடிப்படை வசதிகளை செய்வதற்கும், 5 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் வீடுகள் கட்டப்பட்டன. அடிப்படை பணிகளில் 23 பணிகள் முடிக்கப்பட்டது. கோம்பை ரோட்டில் கழிப்பறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், சமுதாய கூடம் கட்டும் பணி மட்டும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. அந்த பணிக்காக 26 லட்சம் ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.தற்போது வாரச்சந்தை அருகில், மெயின்ரோட்டில் ஆர்.சி.எச்., நகராட்சி ஆஸ்பத்திரி அருகில் சமுதாய கூடம் கட்ட நகராட்சி முடிவு செய்துள்ளது. இன்றைய விலை விகிதப்படி, 35 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை, நகராட்சி பொதுநிதியில் இருந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
Last Updated on Thursday, 30 August 2012 09:51