தினமணி 25.09.2014
புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
திருச்சி மாநகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த இரு மாமன்ற உறுப்பினர்களும் புதன்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டனர்.
15ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மு. ராஜலட்சுமி, 32ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெ. சங்கர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மக்களவை உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி, நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், என். மனோகரன், எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.