ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்டப் பணிகள் துவக்கம்

Wednesday, 18 December 2013 11:30 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி               18.12.2013

ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்டப் பணிகள் துவக்கம்

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 கோபி அருகே வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட கள்ளியங்காடு பகுதியில் தார்சாலை, பங்களாப்புதூரில் கான்கிரீட் சாலை, வாணிப்புத்தூரில் குடிநீர் வசதி, டி.என்.பாளையத்தில் சாக்கடை வசதி ஆகிய பணிகளுக்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி தொடக்க விழாவுக்கு வாணிப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். விழாவில் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணீதரன் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.