சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் 36 லட்சத்தில் வளர்ச்சி பணி

Thursday, 26 December 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினகரன்             26.12.2013 

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் 36 லட்சத்தில் வளர்ச்சி பணி

மொடக்குறிச்சி: சிவகிரி பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கினார். அந்தப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது. எம்.பி., கணேசமூர்த்தி, பணிகளைதுவக்கி வைத்தார்.

பாலமேடு பிரிவில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் சாலை ரூ.10 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. சாணார் பாளையத்தில் ரூ.1 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு, கவுண்டம்பாளையத்தில் ரூ.5 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தலையநல்லூரில் ரூ.10 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை எம்.பி., கணேசமூர்த்தி துவக்கி வைத்தார்.

மேலும் அம்மன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி,  ரத்தினபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ரூ.4 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டிகளை அவர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில் மாவட்ட மதிமுக அவைத்தலைவர் குழந்தைவேலு, ஒன்றிய செயலாளர் கொற்றவேல், நகர செயலாளர் சுப்பிரமணியம், அவைத்தலைவர் தலைசை கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.