தினமணி 30.12.2013
குத்தாலம் பேரூராட்சியில்ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
குத்தாலம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் எம்.சி. பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொது சுகாதார பணிக்காக புதிதாக ஒரு டிராக்டர் டிப்பரும், ஒரு கழிவுநீர் வாகனமும் வாங்குவது, நபார்டு திட்டப்படி ரூ. 24 லட்சத்தில் ராஜகுடியானத் தெரு, ராஜதலையாரித் தெரு,ர ôஜ காலனி மற்றும் பொன்நகரில் தார்ச் சாலை அமைப்பது, ரூ. 3 லட்சத்தில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு சுற்றுச் சுவர் அமைப்பது, மண்டல மானிய நிதியின் கீழ் ஏகேபி நகர், மேட்டுத் தெரு, விலாவடி காலனி தெருக்களில் சிமெண்ட் சாலைகள் ரூ. 6.83 லட்சத்தில் அமைப்பது என்பன உள்பட ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.