சிவகாசி நகராட்சியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Monday, 06 January 2014 08:55 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி               06.01.2014

சிவகாசி நகராட்சியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி நகராட்சியில் ரூ. 61.75 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது என நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  நகராட்சி பகுதியில் உள்ள மருதுபாண்டியர் ஓடையில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்ய ரூ. ஒரு லட்சம், மீன் சந்தையில் கடைகள் கட்டும்பணிக்கு ரூ. 10 லட்சம், காளியப்பா நகரில் தார்சாலை அமைக்க ரூ. 8 லட்சம், மணிநகரில் சுகாதார வளாகம் கட்ட ரூ. 2.50 லட்சம் புதுத்தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 6.50 லட்சம், பி.கே.எஸ்.தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூபாய் 4.40 லட்சம், வெண்டர் பிள்ளைத் தெருவில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் அமைக்க ரூ. 7 லட்சம், ஓடைத் தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 3.75 லட்சம், டம்பர்பின் வைக்க பிளாட்பாராம் அமைக்க ரூ. 1 லட்சம், சோலை காலனியில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 5.75 லட்சம், பாரதிநகரில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 1.20 லட்சம், வேலாயுதம் சாலையில் ஸ்டேட் பாங்க் பின்புறம் பேவர் பிளாக்க அமைக்க ரூ. 6.75 லட்சம், பெரியகுளம் காலனி மற்றும் மாசில்லா மணிநகரில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 8.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது பொது நிதியிலிருந்து செலவழிக்கப்படும். இப்பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.