பேரூராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும்பேரவை கூட்டத்தில் தீர்மானம்

Saturday, 01 February 2014 10:37 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்             01.02.2014

பேரூராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும்பேரவை கூட்டத்தில் தீர்மானம்

அன்னவாசல், : புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசலில், சாலை ஓர வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் முத்தை யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஜடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன், அன்னவாசல் பேரூராட்சி கவுன்சிலர்கள் மீராமொய்தீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு எளிதில் குறைவான விலையில் கிடைக்கச் செய்யும், நோக்கத்தோடு வியாபாரம் செய்து வரும் சாலை ஓர வியாபாரிகளுக்கு தொழில்துறையை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு வங்கிகளில் மானியக்கடன் வழங்க வேண்டும். சாலை ஓர வியாபாரிகளின் தொழில் பாதுகாப்பிற்கு பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை, வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வெங்கடாசலம், சாகுல் அமீது, ஆறுமுகம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.