தினமணி 01.02.2014
நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
திருத்தங்கல் நகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2013-2014ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, தண்ணீர் கட்டணம், உரிமக் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை 28.2.2014ஆம் தேதிக்குள், நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமலிங்கம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.