குடிநீர் இணைப்பு துண்டிப்பு மின்மோட்டார் பறிமுதல்

Wednesday, 05 February 2014 10:19 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்            05.02.2014

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மின்மோட்டார் பறிமுதல்

அனுப்பர்பாளையம், : அவிநாசியில் குடிநீர் குழாயிலிருந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்ததால், நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்தனர்.

அவிநாசி பழைய பஸ் நிலையம் அருகே போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கடை வீதி குடியிருப்பு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாகவும், அந்த பகுதியில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் குடிநீர் மிகவும் குறைவாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடிநீரில் சாக்கடை கலப்பதில்லை என தெரிந்தது. மேலும் அங்குள்ள ஒரு உணவகத்தில் குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை பொருத்தி அதிகளவு குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் மின்மோட்டாரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுபோல புகார்கள் அடிக்கடி வருவதால், தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு மின்மோட்டாரை வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டுபிடித்து மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.