ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா உணவகம்

Monday, 10 February 2014 11:58 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்             10.02.2014 

ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா உணவகம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் சங்க திருவள்ளூர் வட்ட மாநாடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு திருவள்ளூர் வட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

வட்டச் செயலாளர் அருண்டேனியர் வரவேற்றார். பொருளாளர் மெல்கிராஜா முன்னிலை வகித்தார்.

தீர்மானங்கள்:

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும். விடுமுறை நாள்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விஸ்வநாதன் நன்றி கூறினார்.