பாதாளச் சாக்கடைப் பணி:அமைச்சர் நேரில் ஆய்வு

Tuesday, 11 November 2014 06:56 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print
தினமணி      11.11.2014

பாதாளச் சாக்கடைப் பணி:அமைச்சர் நேரில் ஆய்வு

அம்பத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

 இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:

சென்னை குடிநீர் வாரியம் மூலம் ரூ. 74.32 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்பத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரெட்டிபாளையம் சாலை, ஜஷ்வய நகரில் நடைபெறும் குழாய்கள் பதிக்கும் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

 மேலும், ஆவடியில் ரூ. 18 கோடியில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இந்த ஆய்வில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.