மானாமதுரை பேரூராட்சி: ஜன. 31 க்குள் வரி பாக்கிகளை செலுத்த வேண்டுகோள்

Saturday, 25 January 2014 07:04 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி             25.01.2014

மானாமதுரை பேரூராட்சி: ஜன. 31 க்குள் வரி பாக்கிகளை செலுத்த வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்தப்படாத அனைத்துவிதமான வரி பாக்கிகளையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தெரிவித்துள்ளதாவது:

  ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை மே மாதத்துக்குள்ளாகவும் இரண்டாம் அரையாண்டுக்கான வரி பாக்கிகளை நவம்பர் மாதத்துக்குள்ளும் செலுத்த வேண்டும். மானாமதுரை பேரூராட்சி பகுதியில் இதுவரை வரி பாக்கிகளை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக வரி பாக்கிகளை 31 ஆம் தேதிக்குள் செலுத்தி சட்டப்பூர்வ மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 வரி மற்றும் வரியற்ற இனங்களை செலுத்தாமல் உள்ள நபர்களின் பெயர் பட்டியல் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டர் பிளக்ஸ் போர்டுகளில் வைக்கப்பட்டு தினசரி நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படும்.

  வரி செலுத்தாதவர்களின் வீட்டு மின் இணைப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மின் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்கவும் மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.

  விடுமுறை நாள்களில் வரி பாக்கிகளை செலுத்த ஏதுவாக சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் வசூல் மையம் செயல்படும் என்றார்.