மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Wednesday, 27 March 2013 09:37 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினகரன்     27.03.2013

மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்


திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் இன்று (27ம் தேதி) தாக்கல் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் மாநகராட்சி, நகராட்சிகளில் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் கூட்டம் நடக்கும். அடுத்த நிதியாண்டில் மேற்கொள்ள உள்ள பணிகள், அதற்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

அதன்படி திருப்பூர் மாநகராட்சியின் வரும் நிதி ஆண்டுக்கான 2013-14ம் ஆண்டின் வரவு செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் இன்று (27ம் தேதி) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில், மேயர் விசாலாட்சி முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த ஒரு வாரமாக பட்ஜெட் தயராப்பு பணிகள் தீவீரமாக நடந்து வந்தன. பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இதேபோல் குடிநீர், ரோடு வசதி உள்ளிட்ட பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.