தினமலர் 02.08.2012
உடன்குடி டவுன் பஞ்சாயத்தில்205 தெருவிளக்குகள் அமைக முடிவு
உடன்குடி : உடன்குடி டவுன் பஞ்.,பகுதிகளில் ரூ.25 லட்சம் செலவில் 205 தெருவிளக்குகள் அமைக்கப்படும் என டவுன் பஞ்.,தலைவர் அறிவித்துள்ளார்.உடன்குடி டவுன் பஞ்.,ல் 18 வார்டுகள் உள்ளது. தொழில் நகரமாக வளர்ந்து வரும் உடன்குடியில் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு டவுன் பஞ்.,நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பினர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் பொது நிதியில் இருந்து உடன்குடி டவுன் பஞ்., பகுதியில் 205 மின்சார தெருவிளக்கு அமைக்க ரூ.25 நிதி ஒதுக்கியுள்ளார். தற்போது உடன்குடி டவுன் பஞ்.,18 வார்டுகளில் தெரு விளக்கு அமைக்கப்படும் இடங்களை தேர்வு செய்து தற்போது விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் உடன்குடி டவுன் பகுதி முழுவதும் இரவிலும் பகல் போல் காட்சியளிக்கும். உடனடியாக நிதி வழங்க உத்திரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு உடன்குடி டவுன் பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் ஆயிஷாஉம்மாள் அறிவித்துள்ளார்.