சூரிய மின் விளக்குகள் பொருத்த பங்களிப்பு நிதி வழங்கல்

Saturday, 04 January 2014 10:30 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமணி             04.01.2014 

சூரிய மின் விளக்குகள் பொருத்த பங்களிப்பு நிதி வழங்கல்

புதுப்பாளையம் பேரூராட்சியில் 30 சூரிய மின் விளக்குகள் பொருத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் மின்சார சிக்கனம் மற்றும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

இதற்காக, பொதுமக்களின் பங்களிப்புத் தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் பேரூராட்சித் தலைவர் கா.சித்ரா அண்மையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் என்.ராஜா, இளநிலை உதவியாளர் பெ.பிச்சாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.