நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

Wednesday, 29 January 2014 07:36 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி          27.01.2014 

நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது.

 பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி, மேலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினம் குறித்துப் பேசினர்.

தொடர்ந்து, நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

 நிகழ்ச்சியில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் வி.அனுசுயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.