மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு, முதல்முறையாக விலையில்லா சீருடை மற்றும் காலணிகள்

Friday, 07 February 2014 06:21 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினத்தந்தி              07.02.2014

மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு, முதல்முறையாக விலையில்லா சீருடை மற்றும் காலணிகள்

சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் காலணிகளை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

விலையில்லா சீருடை, காலணி

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியின் 2013-14 வரவு-செலவு திட்ட அறிவிப்பில் தனியார் பள்ளிகளை மிஞ்சிடும் வகையில் மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு அழகிய கண்கவர் சீருடை மற்றும் காலணி வழங்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி நேற்று அயனாவரம் வசந்தா தோட்டத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மேயர் சைதை துரைசாமி 400 மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் காலணிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தலைவர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, துணை ஆணையர்(கல்வி) ஆர்.லலிதா, 6-வது மண்டலக்குழு தலைவர் வெற்றிநகர் மு.சுந்தர், கவுன்சிலர் எஸ்.சுப்புலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்முறையாக...

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின்கீழ் 40 மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 3100 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டு 15 வருடங்களுக்கு பிறகு, முதன் முறையாக விலையில்லா சீருடை தற்போது தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.