குரூஸ் பர்னாந்து: குறுந்தகடு வெளியீடு

Saturday, 20 November 2010 10:29 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி            20.11.2010

குரூஸ் பர்னாந்து: குறுந்தகடு வெளியீடு

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவரான குரூஸ் பர்னாந்து குறித்த குறுந்தகட்டை ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.பி. சுடலையாண்டி வெளியிட்டார்.

தூத்துக்குடி நகராட்சியில் 13 ஆண்டுகள் தலைவராக பணியாற்றியவர் குரூஸ் பர்னாந்து. தூத்துக்குடி நகருக்கு தாமிரபரணியில் இருந்து தனிக் குழாயில் தண்ணீர் கொண்டு வந்த இவர், தூத்துக்குடி நகரின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இவரைப் பற்றி மாநகராட்சி ஊழியர் ரஸ்கின் எழுதிய பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தூத்துக்குடி மட்டக்கடையில் நடைபெற்றது. விழாவில், சுடலையாண்டி எம்.எல்.. கலந்து கொண்டு குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார். பாடல்களை மதுரை மாயா இசைக்குழுவைச் சேர்ந்த யூசுப் என்பவர் பாடியுள்ளார். விழாவுக்கு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ரவிவர்மா தலைமை வகித்தார்.

விழாவில், ஓய்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி ஊழியர் சங்க மண்டலத் தலைவர் ஆர். மாடசாமி, முன்னாள் துறைமுக ஊழியர் வில்சன், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.