சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு செல்போன்

Wednesday, 30 November 2011 09:33 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி          30.11.2011

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு செல்போன்

சென்னை, நவ.29: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை செல்போன்களை வழங்கினார்.

 இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் மாமன்ற உறுப்பினர்களிடம்

 தெரிவிக்க வசதியாக அவர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

 94454 67001 முதல் 94454 67200 வரையிலான எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா செல்போன்களை செவ்வாய்க்கிழமை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

 பொதுமக்கள் தங்கள் வார்டு உறுப்பினர்களை தொடர்பு கொள்ள கடைசி இரண்டு அல்லது 3 இலக்கங்களில் தங்கள் வார்டு எண்ணை பயன்படுத்த வேண்டும்.
Last Updated on Wednesday, 30 November 2011 10:10