தினமணி 04.05.2013
அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினியில் வரி ரசீது
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினி மூலம் வரி ரசீதுகள் வழங்கும் சேவை செவ்வாய்கிழமை தொடங்கப்பட்டது.
இப்பேரூராட்சியில் இதுவரை வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற வரிகள் ரசீது புத்தகம் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ஒவ்வொருவரின் கணக்குகளையும் தேடி எடுத்து, ரசீது போட்டு அதை லெட்ஜரில் வரவு வைப்பது மக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் சிரமமாக இருந்தது.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் இப்பேரூராட்சியில் கணினி மூலம் வசூலிக்கும் வரிகளுக்கு ரசீது வழங்கும் சேவை செவ்வாய்கிழமை முதல் தொடங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலர் அலுவலர் செந்தில், துணைத் தலைவர் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினியில் வரி ரசீது
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினி மூலம் வரி ரசீதுகள் வழங்கும் சேவை செவ்வாய்கிழமை தொடங்கப்பட்டது.
இப்பேரூராட்சியில் இதுவரை வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற வரிகள் ரசீது புத்தகம் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ஒவ்வொருவரின் கணக்குகளையும் தேடி எடுத்து, ரசீது போட்டு அதை லெட்ஜரில் வரவு வைப்பது மக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் சிரமமாக இருந்தது.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் இப்பேரூராட்சியில் கணினி மூலம் வசூலிக்கும் வரிகளுக்கு ரசீது வழங்கும் சேவை செவ்வாய்கிழமை முதல் தொடங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலர் அலுவலர் செந்தில், துணைத் தலைவர் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.