பேருந்து நிலைய பாலப் பணிகள் துவக்கம்

Thursday, 02 August 2012 09:54 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி                                 02.08.2012

 பேருந்து நிலைய பாலப் பணிகள் துவக்கம்

குன்னூர், ஆக. 1: குன்னூர் பேருந்து நிலையம் அருகே இடிந்த பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.குன்னூரில் ஜூலை 9-ம் தேதி கட்டப்பட்டு வந்த பாலம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.

இதைத்தொடர்ந்து இதனை சீரமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. சென்ட்ரிங் பணிகள் முடிவடைந்த நிலையில், நகராட்சி மண்டல இயக்குநர் பாலசந்தர் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இப்பணிகளை ஆய்வு செய்தனர்.

மேல்தளம் அமைக்க இக்குழுவினர் அனுமதி அளித்ததையடுத்து, முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து மண்டல இயக்குநர் கூறியது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் மேல்தளம் அமைக்க கான்கிரீட் பணிகள் துவங்கியபோது, எதிர்பாராதவிதமாக இடிந்தது. இதுகுறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏற்பட்ட சில குறைபாடுகள் சரிசெய்யப்பட்டது.

நகராட்சி மண்டல பொறியாளர் அளித்த அறிக்கையின் பேரில், பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

விரைவில் இப்பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார். குன்னூர் நகர்மன்றத் தலைவர் சி.கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அ.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.