பயணியர் நிழற்குடை பணி: எம்.பி. ஆய்வு

Friday, 24 August 2012 10:58 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி            24.08.2012

பயணியர் நிழற்குடை பணி: எம்.பி. ஆய்வு

செங்கம், ஆக. 23: செங்கம் பேரூராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் நடைபெறும் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணிகளை திருவண்ணாமலை எம்.பி. த.வேணுகோபால் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சம், செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 40 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.

இப் பணிகளை த.வேணுகோபால் எம்.பி. பார்வையிட்டு பணிகள் தரமாக நடைபெற்றுள்ளதா என ஆய்வுசெய்தார். பின்னர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன், திமுக ஒன்றியச் செயலர் க.பிரபாகரன், நகரச் செயலர் சாதிக்பாஷா, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் மு.பெ.கிரி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், அப்துல்வாகித், பன்னீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.