தேனியில் புதிய பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

Tuesday, 31 December 2013 11:01 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி              31.12.2013

தேனியில் புதிய பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

தேனியில் திங்கள்கிழமை கர்னல். ஜான் பென்னிகுயிக் நினைவு நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

     தேனியில், தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை சிட்கோ தொழிற்பேட்டை பின்புறம், நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.15.25 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல். ஜான் பென்னிகுயிக் நினைவாக, அவரது பெயரை தேனி புதிய பஸ் நிலையத்துக்கு சூட்டுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

   புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை பகல் 12.05 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தேனியில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பங்கேற்று பேசினார். தேனி நகர் மன்றத் தலைவர் எஸ். முருகேசன், துணைத் தலைவர் வி. காசிமாயன், ஆணையர் எஸ். ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிதம்பரம் நன்றி கூறினார்.

புதிய பஸ் நிலைய திறப்பு விழாவை அடுத்து, தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், கோவை உள்ளிட்ட 6 வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயங்கத் தொடங்கின.