மதுரையில் நாளை குடிநீர் விநியோகமாகும் பகுதிகள்

Monday, 10 February 2014 08:58 administrator நாளிதழ்௧ள் - குடீநீர் வழங்௧ல்
Print

தினமணி              10.02.2014

மதுரையில் நாளை குடிநீர் விநியோகமாகும் பகுதிகள்

மதுரை மாநகரில் 4 நாள்களுக்கு ஒருமுறை குழாய்களில் மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்து ஒருசுற்று முடிந்து (பிப்ரவரி 10) திங்கள்கிழமை முதல் 2-வது சுற்று துவங்குகிறது.

 இன்று வடகரையில் அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, தாகூர் வால்வு பகிர்மான பகுதிகள், சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள், தென்கரையில் கோச்சடை-1, பெத்தானியாபுரம் பகுதி, ஞாயிற்றுக்கிழமை சந்தை மேல்நிலைத்தொட்டி, ஜிஎல்எஸ்ஆர், பெரியார் பேருந்து நிலையம் பகுதி, கோச்சடை-2 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறும்.

பிப்ரவரி 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வடகரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் வருமாறு:

அதிகாலை 3.30 மணி முதல் 6.30 மணிவரை: அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி-மேற்குப்பகுதி ஆலவாய்நகர், செங்கோல்நகர் 1முதல் 5 தெருக்கள், மீனாட்சிநகர் மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகள், அய்யனார் காலனி, தத்தனேரி மெயின்தெரு.

காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30மணி வரை: ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதி-காலங்கரை, வண்டிப்பாதை, பிடிஆர் நகர், வள்ளுவர் காலனி, பழனிச்சாமி நகர், ஜவஹர்புரம், கிருஷ்ணாபுரம் காலனி, சொக்கநாதபுரம், பாரதிநகர், நாராயணபுரம், ஜேஎன் நகர் பகுதிகள், விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், பழைய நத்தம் சாலை.

பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை: பி அன்ட் டி நகர், மீனாட்சி நகர் பகுதிகள், வள்ளுவர் காலனி பகுதிகள், வாசுகி நகர், குருநகர்.

பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோக பகுதிகள், தாசில்தார் நகர் குறுக்குத்தெரு, சிங்கராயர் தெரு, காக்காதோப்பு.

இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12.30 வரை: சுந்தரராஜபுரம், சோலைஅழகுபுரம் 1-ஆவது மெயின் ரோடு முதல் 4-வது மெயின் வீதி மற்றும் குறுக்குத் தெருக்கள், பாரதியார் தெரு, 4 தரம் குறுக்குத் தெருக்கள்.

தென்கரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 மணி முதல் 7 மணி வரை: ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி பகுதி, ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு, கோமாஸ் பாளையம், கார்விநகர், ஏஏ சாலை, டிடி சாலை, கண்மாய்க்கரை, முன்சிபாளையம், ஜெயில்ரோடு, மேலப் பொன்னகரம், மோதிலால் தெரு, கரிமேடு, ஆரப்பாளையம் கிராஸ் சாலை, பொன்னகரம் பகுதிகள்.

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை: தமிழ்ச்சங்கம் மேல்நிலைத்தொட்டி பகிர்மான பகுதிகள், பேச்சியம்மன் படித்துறை சாலை, வடக்குமாசி வீதி, வடக்கு கிருஷ்ணன்கோவில் தெரு, மேலஆவணி மூலவீதி, தாசில்தார் பள்ளிவாசல், மீன்காரத்தெரு, எம்எம்சி காலனி, ஆதிமூலம் பிள்ளை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், கோவிந்தன்செட்டி தெரு, அனுமார் கோவில் படித்துரை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் 2,3,4, 5 தெருக்கள், கீழப்பட்டமார் தெரு, வடக்குமாசி வீதி.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை: அரசரடி கீழ்மட்டத்தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை: டிபி டேங்க் 2-ஆவது பகிர்மானம், சுப்பிரமணியபுரம் தெருக்கள், ஜெய்ஹிந்த்பரம் 2-ஆவது மெயின்சாலை, எம்கே புரம், செட்டியூரணி, எம்சிசி காலனி, எம்கே புரம் மெயின்சாலை, ஜெய்ஹிந்த்புரம் 1-ஆவது மெயின்ரோடு.

மாலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை: கோச்சடை 3-ஆவது பகிர்மானம், சம்மட்டிபுரம், எம்எம் நகர், வெள்ளக்கண்ணு தியேட்டர் நகர், சொக்கலிங்கநகர்.

இரவு 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை: அரசரடி தரைமட்டத் தொட்டியிலிருந்து லாரி மூலம் விநியோகம்.