நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

Wednesday, 12 February 2014 09:28 administrator நாளிதழ்௧ள் - குடீநீர் வழங்௧ல்
Print

தினமணி             12.02.2014

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாநகராட்சி பகுதியில் 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிப். 12 (புதன்கிழமை) தென்கரை பகுதியில் ரேஸ்கோர்ஸ், செல்லூர், புதூர், மருதங்குளம், ராஜாஜி பூங்கா, அண்ணாநகர், கோரிப்பாளையம், சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டிகள் மூலம் குடிநீர் பெறும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வடகரை பகுதியில், கீழமாரட் 1-ஆவது பகிர்மானம், அரசரடி மேல்நிலைத்தொட்டி, பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி, ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி-1, ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி-2 விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பிப். 13 (வியாழக்கிழமை) தென்கரை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 4 மணி முதல் 7 மணிவரை: ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான எல்லீஸ்நகர், எஸ்.எஸ். காலனி, மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதிகள்.

காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை: பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானப் பகுதிகளான பசும்பொன் நகர், கீழத்தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேருநகர், மாடக்குளம், விகேபி நகர், வடக்குத்தெரு.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை: அரசரடி கீழ்நிலைத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

பிற்பகல் 2.30 முதல் 6 மணி வரை: ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானம் பகுதிகளான தென்னோலைக்காரத்தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்குமாரட் வீதி, தெற்குவெளி வீதி, நாடார் வித்யாசாலை, மீன்கடை, கு.கு.சாலை, மகால் மற்றும் பந்தடி தெருக்கள்.

மாலை 6 முதல் இரவு 11 மணி வரை: ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி 1 மற்றும் சன்னியாசி ஊருணி மேல்நிலைத்தொட்டி பகுதிகளான காமராஜர்புரம் பகுதிகள், பாலரெங்காபுரம், சின்னக்கண்மாய், பங்கஜம் காலனி, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சிநகர், அனுப்பானடி பகுதிகள், நரசிம்மபுரம், நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாசன் பெருமாள் கோவில்தெரு, ரசாயன பட்டறை, கீழச்சந்தைப் பேட்டை.

இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை: அரசரடி கீழ்நிலைத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

வடகரை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 முதல் 6 மணி வரை:ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான வல்லபாய் சாலை, ஜவஹர்சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காக்கைப்பாடினியார் பள்ளி, ராமமூர்த்தி சாலை, பாரதிஉலா சாலை, சிங்கராயர் காலனி, நரிமேடு மெயின் ரோடு, பிடிஆர் சாலை, பீபீகுளம், பெசன்ட் சாலை.

காலை 4 முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 முதல் மாலை 4 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான அழகர்நகர் 1 முதல் 7 தெருக்கள், கற்பக நகர் 4 முதல் 14 தெருக்கள், லூர்துநகர், ராமலட்சுமிநகர், காந்திபுரம், பெரியார்நகர், கன்னிமாரியம்மன் கோவில் தெரு, கற்பக விநாயக கோவில் தெரு.

காலை 6 முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான நரிமேடு, சாலை முதலியார் தெரு, தாமஸ்வீதி, சின்னசொக்கிகுளம், சரோஜினி தெரு, கமலா 1,2 தெருக்கள், கோகலே சாலை, பிடி காலனி, இந்திராநகர், கோரிப்பாளையம், சாலமுத்து தெரு, கரும்பாலை கிழக்குத்தெரு, காந்திநகர்.

காலை 6 முதல் பகல் 12 மணி வரை: கேகே நகர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான மகாத்மா காந்தி 1முதல் 8 தெருக்கள், பழைய எல்ஐஜி காலனி, புதிய எல்ஐஜி காலனி, ஏரிக்கரை சாலை, மானகிரி, டிஆர்ஓ காலனி, காமராசர் நகர்.

மாலை 5 முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம்-சொக்கிகுளம், அண்ணாநகர் பகுதிகள்.

இரவு 7 முதல் பகல் 12.30 மணி வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான நல்லமுத்துப்பிள்ளை, மேலத்தோப்பு, லாடபிள்ளை மற்றும் காளியம்மன் கோவில் தெரு, கிழக்குத்தெரு, மணிகண்டன் நகர், பாரதியார் தெரு, நந்தவனம், வில்லாபுரம் மெயின்ரோடு பகுதிகள்.