2 இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு

Wednesday, 08 September 2010 05:56 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினகரன் 08.09.2010

2 இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு

மும்பை,செப்.8: மும்பையில் இரண்டு இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட் டத்தை செயல்படுத்த எம்.எம்.ஆர்.டி.. திட்டமிட்டுள் ளது.

மும்பையில் கடந்த ஆண்டு சரியாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஆண்டு குடிநீர் தட் டுப்பாடு ஏற்பட் டது. இது போன்ற பிரச்னை எதிர் காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு மும் பையில் கடல் நீரை நன்னீ ராக்கும் திட்டத்தை அமல் படுத்த எம்.எம்.ஆர்.டி.. திட்டமிட்டுள்ளது.

இது போன்ற தொழிற் சாலைகள் இரண்டு இடத் தில் அமைக்கப்பட இருக் கிறது. ஒன்று தென் மும் பையிலும் மற்றொன்று மிராபயந்தரிலும் அமைக்கப் பட இருக்கிறது.

மும்பையில் அமைக்கப் படும் கடல் நீரை நன்னீ ராக்கும் தொழிற்சாலையை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும். மீராபயந்தரில் அமைக்கப்படுவதை மும்பை பெருநகர வளர்ச்சி ஆணை யம் பராமரிக்கும். இரண் டையும் தனியார் உதவியு டன் செயல்படுத்து வது என்று எம்.எம்.ஆர்.டி.ஏ மற்றும் மாநக ராட்சி அதி காரிகள் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றிலும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் நன்னீராக்கப்படும் வகை யில் அமைக்கப்பட இருக் கிறது. இதில் கிடைக்கும் தண்ணீர் விலை அதிகமாக இருக்கும்.

எனவே இதில் கிடைக் கும் தண்ணீரை வர்த்தக தேவைக்கு விற்பனை செய் யப்படும். இத் திட்டத்தை 2013ம் ஆண்டுக் குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. தென் மும்பை மற்றும் புறநகர் பகுதியில் எந்த இடம் என் பது இன்னும் உறுதி செய் யப்படவில்லை. ஆனால் கடல்பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் இத்தொழிற் சாலை அமைக் கப்படும். இத்திட் டத்திற்கு 600 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று கருதப் படுகிறது. சென்னையில் அமைக்கப்படு வது போன்ற திட்டத்தில் இதனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.