குடிநீரைச் சுத்திகரித்து வழங்க ஆட்சியர் அறிவுரை

Wednesday, 24 November 2010 10:24 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி         24.11.2010

குடிநீரைச் சுத்திகரித்து வழங்க ஆட்சியர் அறிவுரை

தேனி, நவ. 23:தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் குடிநீரைச் சுத்திகரித்து விநியோகம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும், தொற்று நோய் பரவாமலும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குடிநீரை முறையாக குளோரினேசன் செய்து, தர பரிசோதனைக்குப் பின்பு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 24 November 2010 11:32