குடிசை பகு­தியில் நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம்முதல் முறை­யாக பம்மல் நக­ராட்­சியில் துவக்கம்

Wednesday, 24 July 2013 08:06 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமலர்             24.07.2013

குடிசை பகு­தியில் நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம்முதல் முறை­யாக பம்மல் நக­ராட்­சியில் துவக்கம்


பம்மல்:பம்மல் நக­ராட்­சியில், குடிசைப் பகுதி மக்­களின் வச­திக்­காக, முதல் முறை­யாக, நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைக்­கப்­பட்டு உள்­ளது. இதன்­மூலம், தின­சரி, ஒரு வீட்­டிற்கு ஒரு குடம் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடிநீர் வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது.பம்மல் நக­ராட்­சியில், 21 வார்­டுகள் உள்­ளன. 12வது வார்டு, குடிசை பகுதி கொண்­டது. இப்­ப­கு­தியில், 2,000க்கும் மேற்­பட்ட வீடுகள் உள்­ளன. நக­ராட்சி பகு­தி­க­ளுக்கு, லாரிகள் மூல­மா­கவும், சின்டெக்ஸ் தொட்டி மூல­மா­கவும் தண்ணீர் வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது. பாலாறு குடி­நீரும் வழங்­கப்­ப­டு­கி­றது. 250 லிட்டர்ஆழ்­துளை கிணறு மூலம் வழங்­கப்­படும் தண்ணீர், குடிப்­ப­தற்கு உகந்­த­தாக இல்லை. சமையல் செய்­வ­தற்கும், துணி துவைப்­ப­தற்கும், பாத்­திரம் கழு­வவும் மட்­டுமே பயன்­ப­டு­கி­றது.

இதனால், பணம் கொடுத்து, குடிநீர் கேன் வாங்கும் நிலை இருந்­தது.இந்த நிலையில், நக­ராட்­சி­களில் குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைத்து, மக்­க­ளுக்கு சுத்­த­மான குடிநீர் வினி­யோகம் செய்­யப்­படும் என, முதல்வர் ஜெய­லலிதா அறி­வித்­தி­ருந்தார். இந்த அறி­விப்பை தொடர்ந்து, தமி­ழ­கத்­தி­லேயே முதல் முறை­யாக, பம்மல் நக­ராட்­சியில், நவீன குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைக்கப் பட்டு உள்­ளது.முதல் கட்­ட­மாக, குடிசை பகுதி கொண்ட, பம்மல் நக­ராட்சி, 12வது வார்டில் அமைக்­கப்­பட்ட, குடிநீர் சுத்­தி­க­ரிப்புநிலை­யத்தை, எம்.எல்.ஏ., தன்சிங் திறந்து வைத்தார். நக­ராட்சி தலைவர் இளங்­கோவன் தலைமை தாங்­கினார்.

தின­சரி, ஆழ்­துளை கிணற்றில் இருந்து, சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு தண்ணீர் ஏற்­றப்­ப­டு­கி­றது. பின், சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்ட குடிநீர், அரு­கே­யுள்ள தொட்­டியில் நிரப்­பப்­ப­டு­கி­றது. ஒரு மணி நேரத்­திற்கு, 250 லிட்டர் தண்ணீர் சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­ப­டு­கி­றது.கூடுதல் மையங்கள்இதை தொடர்ந்து, குடிநீர் வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது. தின­சரி, ஒரு வீட்­டிற்கு, ஒரு குடம் குடிநீர் மட்­டுமே வினி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது.நக­ராட்சி தலைவர் இளங்­கோவன் கூறு­கையில், ''மூவேந்தர் நகர், பாத்­திமா நகர், எம்.ஜி.ஆர்., தெரு, பொன்னி நகர் உள்­ளிட்ட ஒன்­பது இடங்­களில், மக்­களின் வச­திக்­காக, கூடு­த­லாக குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான பணிகள் நடந்துவரு­கின்­றன,'' என்றார்.

Last Updated on Wednesday, 24 July 2013 08:16