ப.கோட்டையில் 56 பயனாளிக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழா

Monday, 22 November 2010 08:39 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமலர்              22.11.2010

.கோட்டையில் 56 பயனாளிக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழா

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் 56 பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் பிரியா இளங்கோ 56 பயனாளிகளுக்கு 1.68 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை மகப்பேறு நிதி உதவியாக வழங்கினார். நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் சீனி இளங்கோ, நகராட்சி கவுன்சிலர் ஸ்ரீதர், நாடியம்மன் கோவில் அறங்காவலர் கோவிந்தராஜ், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ராயல்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துப்புரவு அலுவலர் பாலசுப்ரமணியன், துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நடராஜன், மாரிமுத்து மற்றும் நகர சுகாதார செவிலியர்கள் ஜோஸ்பின்மேரி, பியூலா ஜெயராணி ஆகியோர் செய்திருந்தனர்.