ஏப்ரல் 15 முதல் பெண்களுக்கு கருத்தடை முகாம்

Wednesday, 10 April 2013 06:23 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமணி                 10.04.2013

ஏப்ரல் 15 முதல் பெண்களுக்கு கருத்தடை முகாம்


சென்னை மாநகராட்சி சார்பில் இடைவெளிக்கால பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இடைவெளிக்கால பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டாக்டர் ஆர்.கே. நகர், சஞ்சீவராயன்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், செனாய் நகர், மீர்சாகிப்பேட்டை, பெருமாள்பேட்டை, வடபழனி, சைதாப்பேட்டை மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள 24 மணி நேர பிரசவ மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த அறுவை சிகிச்சை மாதவிடாய் வந்த 7 நாள்களுக்குள் செய்யவேண்டும்

இதில் கருவுற்று 12 வாரத்துக்குள் கருக்கலைப்புடன்கூடிய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். கருத்தடை செய்பவர்களுக்கு ரூ. 600 ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், முதலில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் 110 பேருக்கு குடைகள் வழங்கப்படும்.

கருத்தடை செய்துகொள்ள விரும்புபவர்கள் 9445190711, 9445190720, 9445190722, 9445190723, 9445194931, 9445194935 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.