நகர்ப்புற ஏழைகள் வீடு கட்ட கடனுதவி

Wednesday, 24 November 2010 00:00 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமலர்              24.11.2010

நகர்ப்புற ஏழைகள் வீடு கட்ட கடனுதவி

விருதுநகர் : நகர்ப்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கும், வாங்குவதற்கும் கடனுதவி வழங்கப்பட உள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மாத வருமானம் 5,000 ரூபாய்க்குள் பெறுவோர், 25 சதுர மீட்டர் பரப்பளவிலும், 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பெறுவோர் வீடு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்ட வேண்டும். சொந்த இடத்திற்கான வீட்டு மனை பட்டா பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வருமான அடிப்படையில் ஒரு லட்சம், மற்றும் 1.60 லட்ச ரூபாய் தேசிய வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தரப்படும். இதை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். வட்டியில் ஐந்து சதம் மானியமாக வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு மதுரை எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.