நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 20 பேருக்கு ரூ.4 லட்சம் தவணைத் தொகை வழங்கல்

Sunday, 26 May 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print
தினமணி       26.05.2013

நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 20 பேருக்கு ரூ.4 லட்சம் தவணைத் தொகை வழங்கல்


மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு தவணைத் தொகையாக ரூ. 4 லட்சத்து 4 ஆயிரத்து 800 சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மாநகராட்சியின் 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 19 ஆவது வார்டு சம்மட்டிபுரம் பகுதியில், அழகிய மதுரை மாநகர் திட்டம் (அம்மா) சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

இத் திட்டத்தைத் துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகையாக 20 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், அரசின் எந்தவொரு நலத்திட்டமும் இடையூறுகள் இன்றி மக்களுக்கு செல்லவேண்டும் என்ற நோக்கத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. மின்வெட்டுப் பிரச்னை வரும் ஜூன் மாதம் முதல் படிப்படியாகக் குறைந்து, டிசம்பருக்குள் முழுவதுமாக மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படும். மின் திட்டங்களுக்காக ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால், துணைமேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து, நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர் ரெகோபெயாம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.