நெல்லையில் குடிநீர் சப்ளைக்கு மேலும் 4 லாரிகள்: எம்.பி.- எம்.எல்.ஏ. நிதியில் வாங்கப்படுகிறது

Tuesday, 18 August 2009 12:51 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

மாலை மலர் 18.08.2009

நெல்லையில் குடிநீர் சப்ளைக்கு மேலும் 4 லாரிகள்: எம்.பி.- எம்.எல்.ஏ. நிதியில் வாங்கப்படுகிறது

நெல்லை, ஆக. 18-

நெல்லை மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க மாநகராட்சி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மாநகர பகுதியில் புதிதாக 2 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்க பாபநாசம் அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க லாரிகள் மூலம் ஆங்காங்கே குடிநீர் வழங்¢கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமாக 6 லாரிகளும், 1 டிராக்டரும் உள்ளன.

இந்த 7 வண்டிகள் மூலமாக மாநகர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்ய இயலவில்லை. இதனால் கூடுதலாக 4 குடிநீர் லாரிகள் வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

2 லாரிகளுக்கு நெல்லை எம்.பி.ராமசுப்புவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் மற்ற 2 லாரி களை அமைச்சர் மைதீன்கான், மாலைராஜா எம்.எல்.ஏ. ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் நிதி ஒதுக்க கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.