வடுகபாளையம் ரேஷன் கடைக்கு ரூ.3¼ லட்சத்தில் புதிய கட்டிடம்

Friday, 31 January 2014 11:38 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினத்தந்தி                30.01.2014

வடுகபாளையம் ரேஷன் கடைக்கு ரூ.3¼ லட்சத்தில் புதிய கட்டிடம்

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அம்பேத்கார் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3¼ லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் கிரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நகராட்சி என்ஜினீயர் ராஜா, சூடாமணி கூட்டுறவு சங்க துணை தலைவர் வடுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். முன்னதாக கவுன்சிலர் கவிதா வரவேற்று பேசினார். விழாவில் நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் மார்ட்டின், அ.தி.மு.க. பிரமுகர்கள் முபாரக், அருணாசலம், நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.