வேளச்சேரியில் இஸ்லாமியர்களுக்கு மயானம்

Thursday, 23 May 2013 06:11 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமணி          23.05.2013

வேளச்சேரியில் இஸ்லாமியர்களுக்கு மயானம்


சென்னை வேளச்சேரி மயானத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்களுக்கான மயானமாக பயன்படுத்த சென்னை மாநகராட்சி மன்றம் அனுமதியளித்துள்ளது.

இது குறித்த தீர்மான விவரம்: வேளச்சேரியில் உள்ள இஸ்லாமியர்கள் தரமணி 100 அடி சாலையில் மயானம் ஒதுக்க கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

வேளச்சேரி தரமணி 100 அடி சாலையில் உள்ள மயானத்தை இந்து மற்றும் கிறிஸ்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயான வளாகத்தில் ஒரு காலி குட்டை உள்ளது. அதனை சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த காலி குட்டையில் 50 சென்ட் இடத்தை இஸ்லாமியர்கள் மயானமாக பயன்படுத்த வகை செய்யப்படுகிறது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.