குடிநீர் குழாய் மாற்றும் பணி

Tuesday, 28 May 2013 05:59 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமணி        28.05.2013

குடிநீர் குழாய் மாற்றும் பணி


வெள்ளக்கோவிலில் ரூ.2.78 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் மாற்றும் பணி திங்கள்கிழமை துவக்கப்பட்டது.

புதுப்பையிலிருந்து அமராவதி ஆற்று நீராதாரம் மூலமாக குழாய் வழியாக வெள்ளக்கோவில் நகருக்கு பல ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பழைய குழாய்கள் சேதமடைந்துவிட்டதால், வெள்ளக்கோவில் நீருந்து நிலையம் வரை புதிய குழாய்களைப் பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் முழு அரசு மானியத்துடன்  ரூ.2.78 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. 9 ஆயிரத்து 480 மீட்டர் நீளத்துக்கு உயரழுத்த நைலான் பைப்புகள் பொருத்தப்படுகிறது.

இதற்கான பணிகளை காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் துவக்கி வைத்தார் . நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி தலைமை வகித்தார்.

நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் பி.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் (பொ) கே.சரவணன், துணைத் தலைவர் பி.தங்கராஜ், பணி மேற்பார்வையாளர் கே.மணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.