மனை வரன்முறை வரைபடங்களை வெளியிட டி.டி.சி.பி., ஆலோசனை

Thursday, 24 May 2018 06:58 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினமலர்              24.05.2018  

மனை வரன்முறை வரைபடங்களை வெளியிட டி.டி.சி.பி., ஆலோசனை

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., வழியை பின்பற்றி, நகர் ஊரமைப்புத்துறையான, டி.டி.சி.பி., பகுதிகளில் வரன்முறை செய்யப்படும், லே - அவுட் வரைபடங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.ஆர்வம் இல்லைதமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் அங்கீ காரமின்றி உருவான மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், 2018 நவ., 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இத்திட்டத்தில் பங்கேற்க, மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதில், சில சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் விண்ணப்பிக்க துவங்கி உள்ளனர்.சி.எம்.டி.ஏ., பகுதியை விட, டி.டி.சி.பி., பகுதிகளில் அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. வரன்முறைப் பணிகளும் விரைவாக நடப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனைகள் வரன்முறை செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், வரன்முறை ஒப்புதல் வழங்கப்பட்ட, லே - அவுட் வரைபடங்களை, சி.எம்.டி.ஏ., பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு, பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.வரன்முறைஇது குறித்து, டி.டி.சி.பி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சி.எம்.டி.ஏ., போல், டி.டி.சி.பி., பகுதிகளிலும் வரன்முறை செய்யப்பட்ட, லே - அவுட் வரைபடங்களை இணையதளத்தில் வெளியிட, ஆலோசித்து வருகிறோம். இந்த பணிகளை, உள்ளூர் திட்ட குழும அளவிலேயே மேற்கொள்ளவும், ஆலோசனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -