தினத்தந்தி 19.06.2013
சிறுவாணியில் நீர்மட்டம் உயர்வு: கோவைக்கு தினசரி 45
எம்.எல்.டி குடிநீர் வினியோகம் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது நேற்று
முதல் நிறுத்தப்பட்டது
எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மோட்டார்
வைத்து குடிநீர் உறிஞ்சி எடுப்பது நேற்று முதல் நிறுத்தப்படுகிறது.
சிறுவாணி அணை
கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த ஆண்டு
தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் அணை
வறண்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
இதனால் கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குட்டை போல் தேங்கி
கிடந்த பகுதியில் இருந்து 6 மோட்டார்கள் வைத்து, தண்ணீர் உறிஞ்சி
எடுப்பதற்கு அனுமதி பெறப்பட்டு கோவைக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு
வருகிறது.
80 சென்டி மீட்டர் மழை
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம்
80 மில்லி மீட்டர்(8 சென்டி மீட்டர்) மழை பெய்தது. இதனால் சிறுவாணி
அணையின் இருப்பு நிலை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தினசரி 45 எம்.எல்.டி தண்ணீர்
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இருப்பு நிலை நீர்மட்டம்
தாண்டி, அணையில் உள்ள வால்வு பகுதியில் தண்ணீர் மட்டம் வந்துவிடும் நிலை
உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மோட்டார் மூலம் தண்ணீர்
உறிஞ்சி எடுப்பது நிறுத்தப்படுகிறது. இருந்தாலும் தண்ணீர் மட்டம் உயர்ந்து
விட்டதால் அந்த மோட்டார்களை தற்போது எடுப்பதற்கு முடியாத சூழ்நிலை உள்ளது.
சிறுவாணி முற்றிலும் வறண்டு இருப்பு நிலை நீர்மட்டத்துக்கு சென்ற போது
மோட்டார் மூலம் 30 எம்.எல்.டி முதல் 35 எம்.எல்.டி வரை எடுக்கப்பட்டு
வந்தது. தற்போது தினசரி 45 எம்.எல்.டி (4½ கோடி லிட்டர்) தண்ணீர்
எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தாலும்,
நிரம்பி வழிந்தாலும் தற்போது எடுக்கப்படும் 45 எம்.எல்.டி அளவுக்கு மேல்
எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.