தினமணி 22.05.2013
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்
சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம், ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமையன்று (மே 22) நடைபெறுகிறது.
மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களில், சப்பாத்தி, கறிவேப்பிலை சாதம், எழுமிச்சை சாதம் மற்றும் பொங்கல் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதல்வரின் அறிவிப்புகள் அம்மா உணவகங்களில் அமல்படுத்தப்படும் தேதி குறித்த தீர்மானங்கள் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் பாதுகாவலர்களை நியமிப்பது குறித்த அறிவுப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.