தினமணி 01.11.2010
ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே கீழ்பாலம்: பூமிபூஜையுடன் தொடங்கியதுஒட்டன்சத்திரம்
, அக். 31: ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே கீழ்பாலம் அமைக்க பூமிபூஜை நடைபெற்று, பணிகள் தொடங்கியது.ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்திநகர்
, விஸ்வநாத நகர், வினோபா நகர், திடீர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகருக்குள் வரவேண்டுமென்றால், ரயில்வே பாதையை கடந்து வரவேண்டும். ஆனால், தற்போது திண்டுக்கல்–கொச்சி இடையேயான ரயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஒரு பக்கம் பாதை அடைக்கப்பட்டுவிட்டது. இதனால், அப்பகுதி மக்கள் நகருக்குள் வந்து செல்ல மிகவும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், கீழ்பாலம் அமைக்க வேண்டும் என்று, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில்
, இவர்கள் இருவர் மேற்கொண்ட முயற்சியில், அப்பகுதியில் கீழ்பாலம் அமைக்க புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டு, பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில்
, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன், நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், நகராட்சி ஆணையர் மூர்த்தி மற்றும் நகராட்சி கவுன்சிலர் கே. சுப்பிரமணி, சின்னம்மாள் கோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.