தினகரன் 03.01.2011
குடிநீர் தொட்டிகளில் வெப்கேமரா லாரிகளை கண்காணிக்க திட்டம்
கோவை, ஜன.3:
கோவை மாநகராட்சியில், 45 இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையிலிருந்து குடிநீர், பிரதான குழாய் மூலம் சாயிபாபாகாலனி பாரதிபார்க் மற்றும் காந்திபார்க்கில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு வருகிறது. பின்னர், சிறு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கும், வார்டுகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
நகரில், பாரதிபார்க், கணபதி ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம், புலியகுளம் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து லாரி மூலம் குடிநீர் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை நகரில், 4 மாநகராட்சி லாரி மற்றும் 14 தனியார் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரில் 761 புதிதாக அங்கீகரிக்கப்பட்ட லே அவுட் இருக்கிறது. இங்கே பகிர்மான குழாய், குடிநீர் இணைப்பு 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.