தினமணி 01.03.2013
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்
அரியலூர் நகராட்சி அலுவலக வளாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை, நகர்மன்றத் தலைவர் முருகேசன் தொடக்கி வைத்தார். ஆணையர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
இதில் ரத்த வகை கண்டறிதல், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. முகாமில் அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்றனர்.