தினமணி 02.04.2013
துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை
மானாமதுரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு தொழிலதிபர் சுப்ரமணியம் குடும்பத்தார் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சீருடைகளை பேரூராட்சி நிரந்த துப்புரவுப் பணியாளர்கள், மகளிர் குழு துப்புரணிப் பணியாளர்களுக்கு தொழிலதிபர் சுப்ரமணியன் வழங்கினார்.
பேரூராட்சித் தலைவர் ஜோசப்ராஜன், துணைத் தலைவர் காளீஸ்வரி, செயல் அலுவலர் சஞ்சீவி, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.