தினகரன் 07.12.2010
நகராட்சி கூட்டம்
அரியலூர், டிச. 8: அரியலூர் நகராட்சி நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் தலை மை வகித்தார். நகராட்சி ஆணையர்(பொ) மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி அலுவலர் குமரன் தீர்மானம் பற்றி விளக்கி கூறினார். பாதாள சாக் கடை திட்டம் ஆளிறங்கு கிணறுகள் மற்றும் தனியார் மனிதக்கழிவு தொட்டிகளில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கி பணிகளை மேற்கொண்டு திடீர் மரணம் ஏற்படாமல் தடுப்பது. மனித கழிவுகளை மனிதனே அகற்றக்கூடாது என்ற சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் இருந்து வரப்பெற்ற அரசாணையின்படி மனித கழி வுகளை மனிதரை கொண்டு அகற்றுவதை தடை செய் வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.