தினமலர் 31.01.2010
நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் குரல்: பாளை.,யில் மாத இதழ் வெளியீட்டு விழா
திருநெல்வேலி: தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பிற்காக தேசிய அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடந்தது. பாளை., மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை மேயர் முத்துராமலிங்கம், மாத இதழை வெளியிட, நெல்லை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சண்முகம் பெற்றுக் கொண்டார். தொழிற்சங்க உரிமைகள் என்ற இதழினை பாளை., மண்டல தலைவர் சுப.சீதாராமன் வெளியிட்டார். நகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் நெல்லை மண்டல தலைவர் நாகூர்மீரான் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். நூல் ஆசிரியரும், மாநில பொதுச் செயலாளருமான சீத்தாரமன் நன்றி கூறினார்.
விழாவில் மாநில பொருளாளர் சக்திவேல், மாநில அமைப்புச் செயலாளர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சுடலைமுத்து, அமைச்சு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துதுரை, நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் விஜயலெட்சுமி, டிரைவர் சங்க மாநில பொதுச் செயலாளர் இலியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.