தினமலர் 17.03.2010
பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம்
தாண்டிக்குடி:பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் காமாட்சி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் வெங்கட்ரமணன், துணைத்தலைவர் சந்திரசேகரன், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வறட்சியை முன்எச்சரிக்கையாக தடுக்கும் நோக்கில் அருங்கானல், மிளகுசுழி, சோலைவயல் உள்ளிட்ட நீர் தேக்க தொட்டிகளை தூர்வாருதல், துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.