தின மணி 23.02.2013
ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்
குடியாத்தம் அருகே ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 6 குடிசைகளை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அருகே உள்ள நாராயணசாமி தோப்பு பகுதியில் கௌன்டன்யா ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் வியாழக்கிழமை இரவு குடிசைகளை அமைத்துள்ளனர்.
தகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன் தலைமையில், துணை வட்டாட்சியர் பிரபாவதி, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், இளங்கோ உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை அங்கு சென்று குடிசைகளை அகற்றினர்.