தினமணி 27.03.2013
இன்று மாநகராட்சி பட்ஜெட்
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் (2013-14) கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
2012-13இல் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.
வரும் ஆண்டிலும் ரூ.100 கோடிக்கும் கூடுதலான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இப் பட்ஜெட் இருக்கும் என்கின்றனர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். மாநகராட்சி நிதிக் குழுத் தலைவர் சந்திரசேகர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
துணைமேயர் சு.குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.