தினமலர் 15.04.2010
குடிநீர் கட்டணம் செலுத்த பு.புகளூர் பஞ்., அறிவிப்பு
வேலாயுதம்பாளையம்: புன்செய்புகளூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை வரும் 16ம் தேதிக்குள் செலுத்த டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் 16ம் தேதிக்குள் குடிநீர் கட்டணம் செலுத்த தவறியவர்கள் வரும் 30ம் தேதிக்குள் 15 ரூபாய் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் மே முதல் தேதி குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை துண்டிக்கப்படுவதுடன், 115 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளத