தினமலர் 11.03.2013
குருந்துடையார்புரம் மாநகராட்சி பள்ளிக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்
திருநெல்வேலி:குருந்துடையார்புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவி வழங்கப்பட்டது.
லயன்ஸ் சங்க ஆளுனர் ஏசு பாலன், ராஜம் ஏசுபாலன், துணை ஆளுனர் உபால்டுராஜ் மெக்கன்னா, இரண்டாம் ஆளுனர் சிவகாமி ஆறுமுகம், செயலர் மாயாண்டி, தலைவர் பொறியாளர் கந்தமாமி, பொருளாளர் சாரங்கபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கனரா பாங்க் அலுவலர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை காந்திமதி வரவேற்றார். உதவி ஆசிரியை அனிதா கிறிஸ்டி நன்றி கூறினார்.